Bike maintanance


FOR BIKE MAINTENANCE THERE ARE THE FOLLOWING TIPS:
  • Regularly check the tyres and air pressure.
  • Check your tyres for cuts and scrapes on the tyres that might result in a blowout. Also keep checking the tyre treads once every week and the wheels are balanced and the alignment checked if the wear is uneven.
  • Check the engine oil level every day before you ride your bike. The oil level should be between upper and lower marks. Top up the engine oil if required and also check for oil leakage.
  • Check the two-wheeler body surface regularly to ensure good surface finish. Before cleaning the bike, see to it that the ignition switch unit, H.T. Coil and silencer are covered with plastic sheets.
  • While cleaning the bike, use low pressure water. The painted surfaces must be washed only with water.
  • Take periodic checks of the motorcycle battery for a long life. Check the electrolyte levels against the top and bottom markings on the battery shell. Top up with distilled water. Check for battery leakage.
  • Clean the sparks regularly. You can clean the spark points with emery paper.
  • Keep the carburetor clean by regularly cleaning the carburetor float chamber and other parts. Clean the jets by forcing compressed air through them.
  • Keep the brakes spaced in the right way. If kept too tight or too loose, is dangerous. Brakes must be tightened as per the rider's requirement.
  • Check the cables frequently for kinks, bends and frayed ends. Replace if the strands appear broken.
  • Ensure that the insurance cover is done in the valid time frame.

Jokes



அந்த நீதிபதி அப்பவும் அரசாங்கத்தை எதிர்த்து தீர்ப்பு வழங்க மாட்டார்
ஏன்
அரசாங்கம் அவருக்காக ஹவுசிங் போர்ட் ஃப்ளாட் அல்லாட் பண்ணியிருக்கே

Expected Quality for C.M

முதலமைச்சர் தேவை( கண்டிப்பாக 18+ மட்டும்)

இதோ கூப்பிடும் தூரத்தில் தேர்தல் வந்துவிட்டது.நான் முதல்வர், அவன் முதல்வர் என்று அவரவர் வரிந்து கட்டிக்கொண்டு இனிமேல் வருவார்கள். ஆனால்,  நேர்மையான முதலமைச்சர் வேட்பாளர் கிடைப்பது அரிது . முதல்வர் பதவிக்கான தகுதிகளை நான் இப்போது பட்டியலிடப்போகிறேன்.

குடும்பத்திற்கு பதவிகள் வழங்க கூடாது.
டாஸ்மாக் கடைகள்மூலம் பலரின் தாலிகளை அறுத்துஅந்த வருவாயினால்  இலவசங்கள் வழங்க கூடாது.
ஊழல் அறவே கூடாது
தன் கட்சியினர் ஊழல் செய்தால் அந்த ஆட்சியைவிட இது கம்மி, அந்த மாநிலத்தைவிட இது கம்மி என்று சப்பை கட்டு கட்டக்கூடாது.
ஈழத்திற்காக அரைநாள் உண்ணாவிரதம் கூடாது.
சொந்தமாக தொலைக்காட்சி தொடங்க கூடாது
முக்கியமாக தந்தி அடிக்கவே கூடாது

மலை வாசஸ்தலங்களில் படுத்துக்கொண்டு அறிக்கை அரசியல் செய்யக்கூடாது.
கட்சிக்கு சம்பந்தம் இல்லாத அரைவேக்காடுகளை உடன்பிறவா சகோதரியாக அறிவிக்க கூடாது
நாங்கள் தூய்மையானவர்கள் என்று ஊர் சிரிக்க சொல்ல கூடாது
காலில் விழும் கலாச்சாரம் கூடவே கூடாது.
கூட்டணி தலைவர்களை காக்க வைக்க கூடாது
மந்திரிகளை அடிக்கடி மாற்றக்கூடாது

தனக்கு கட்சியிருப்பதையே மறந்து இன்னொரு கட்சி கிளை செயலாளர் போல் நடந்து கொள்ளக்கூடாது
பொது மேடைகளில் நீலிக்கண்ணீர் வடிக்க கூடாது
அய்யகோ இப்படித்தான் அந்த நாட்டில்...என்று உலக வரலாறு கூறல் கூடாது

தொட்டதற்கெல்லாம் புள்ளிவிபரங்கள் கூறக்கூடாது
மக்களோடும்,தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று குழப்பக்கூடாது
சினிமாவில் நடிக்க கூடாது

மகனுக்கு மந்திரி பதவி தரும்பட்சத்தில்  யாரோடும் கூட்டணி என்று சொல்லக்கூடாது
வாக்கெடுப்பு நடத்தி கூட்டணியை முடிவு பண்ணக்கூடாது
சங்க சொத்துக்களுக்கு தன் மனைவி  பெயரை வைக்கக்கூடாது

Wait for Marriage


வாழத்துடிக்கும் வாலிபனே உண்மைக்காதலை ஊர்ந்தறிந்திடு காதலெனும் அழகுத்தேரினில்  பவ்வியமாய் நீயும் அமர்ந்திடு கன்னியொன்று என்றுகண்டு  கண்ணடைத்து காதல் சொல்லி  காமவலையில் கட்டுண்டு காளையுனை அழித்திடாதே... அழகியகுணம் அன்புநிறைந்தமனதுடன்  அவளொருவள் உனக்காகவே புலோகம் அடைந்துவிட்டாள் வீற்றிருக்கிறாள் வைகறையில் நீயிழைக்கும் தவறொன்றை  உன்துணை செய்ய ஏற்பீரா.. கற்பின் சமநிலைக்கு  உன் கற்பும்மேலும் வாசிக்க

Happy life every minutes

வாழ்க்கை வசப்பட.... 

* அழுத்தமாக கை குலுக்குங்கள்...
* கண்களை நேராக பார்த்துப் பேசுங்கள்...
* இயல்பாக, இதமாகப் புன்னகையுங்கள்..
* அறிமுகமானவர்கள் எதிர்ப்படும் போது, "வணக்கம்" சொல்வதில் முந்திக் கொள்ளுங்கள்..
* உங்கள் பலங்களை  பலப்படுத்துங்கள்...
* உங்கள் பலவீனங்களை பலவீனப்படுதுங்கள்...
* நெஞ்சார நன்றி சொல்லுங்கள்...
* இயற்கையை ரசிக்க நேரம் ஒதுக்குங்கள்..

* எப்போதும் துணையிருக்கும் நண்பர்களுக்கு,
எப்போதும் வழிகாட்டும் எழுத்துக்களுக்கு,
எப்போதும் சிரிக்கும் பூக்களுக்கு,
எப்போதும் கைவிடாத நம்பிக்கைக்கு,
நன்றி சொல்லுங்கள்....

* சோர்வாக இருக்கிறதா:

* அமைதியான இடத்திற்கு செல்லுங்கள்...
* உங்கள் பலன்களை எழுதுங்கள்...
* மாற்று வழிகளைச் சிந்தியுங்கள்..
* தியானம் செய்யுங்கள்...

சோதனை சூறாவளியில்: 

* அச்சம் தான் நம் எதிரி - அச்சத்தை உதறுங்கள்.
* உடனடியாய் என்னை செய்ய? உள்ளுணர்வைக் கேளுங்கள்.
* அடுத்தடுத்துப் போராட ஆயத்தம் ஆகுங்கள்...
* போனதெல்லாம் போகட்டும்.... புதிதாக தொடங்குங்கள்..

வாழ்க்கை வசப்பட:
* பகைவர்கள் மிக நல்ல நண்பர்களாய் மாறலாம்..
* பழைய தோல்விகளின் பாரங்கள் நீங்கலாம்.
* எத்தனை இழந்தாலும் இழந்த பொருளை மீட்கலாம்.
* என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம்..
* பதறாத மனம்தான் புதுமைகள் நினைக்கும்..
* புதுமைகள் செய்தால் செயல்கள் சிறக்கும்.
* செயல்கள் சிறந்தால் சாதனை பிறக்கும்.
* சாதனை பிறந்தால் வாழ்க்கை இனிக்கும்..
 

* புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்...
* பழைய நண்பர்களைக் கொண்டாடுங்கள்...
* இரவல் வந்குபவற்றைத் திருப்பி கொடுங்கள்..
* நாளொன்றுக்கு மூன்று பேரையாவது பாராட்டுங்கள்..

நிரந்திரமான மகிழ்ச்சி :

* துணிவான முடிவுகளில் இருக்கிறது .
* பணிவான வார்த்தைகளில் இருக்கிறது...
* கனிவான அணுகுமுறையில் இருக்கிறது..
* பரிவான உதவிகளில் இருக்கிறது...
* தோல்வி வந்தால் பொறுமை அவசியம்..
* வெற்றி வந்தால் பணிவு அவசியம்..
* எதிர்ப்பு வந்ததால் துணிவு அவசியம்...
* எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்...
* கவனக்குறவை உணர்த்தும் தோல்விகளுக்கு,
* திருத்தத் தூண்டிய தவறுகளுக்கு, 
* வைராக்கியம் வளர்த்த அவமானங்களுக்கு,
* பாராட்டும்படி வளரச் செய்த பரிகாசங்களுக்கு 
நன்றி சொல்லுங்கள்...
* ஆற்றல் சிதறாமல் திரட்டிக் கொள்ளுங்கள்.
* அடிப்படை சரியாமல் நிறுத்திக் கொள்ளுங்கள்..
* மாற்று ஏற்பாட்டை வகுத்துக் கொள்ளுங்கள்...
* மறுபடி  எழுவோம் என் உறுதி கொள்ளுங்கள்..
* உங்கள் விருப்பத்திற்கு வாழ்க்கையை வளைக்கலாம்.
* உங்கள் கனவுகளை உண்மையென ஆக்கலாம்.
* உங்கள் உறுதியினால் சிரமங்களைக் கடக்கலாம்.
* உங்கள் எல்லைகளை நீங்களே உடைக்கலாம்..  

நிரந்திரமான மகிழ்ச்சி :

* கனவுகளை வரையறுப்பதில் இருக்கிறது..
*லட்சியத்தை செயல்படுத்துவதில் இருக்கிறது.
* இழப்புகளை ஈடுகட்டுவதில் இருக்கிறது  * கணிசமாக சேமிப்பதில் இருக்கிறது.

 வாழ்க்கை வசப்பட:

* வழிதேடி வளர்ந்தவர்தான்  வழிகாட்ட முடியும்.
* பதில் தேடி அடைந்த்தவர்தான் பதில் சொல்ல முடியும்.
* தடுமாறி எழுந்தவர்தான் துணையாக முடியும்.
* முதல் தோல்வி பார்த்தவர்தான் முன்னேற முடியும்..
* எத்தனை முயன்றாலும், முயற்சிகள் போதாது!!!
* எத்ததனை  பயின்றாலும், பயிற்சிகள் போதாது!!!!
* எத்தனை வளர்ந்தாலும், வளர்சிகள் போதாது!!!!

நன்றி 
தினமலர் (வாரமலர்) நாளிதழ்...

When love, pls. love : when work, pls. work

நினைவிருக்கா????


*முதன் முதலாய் என்னைப்பார்த்தபின் 
 என் அலைபேசி, எண்கள் கேட்டு
நீ என் தோழியை நச்சரித பொழுதுகள்
உனக்கு நினைவிருக்கிறதா??

* வாங்கிய எண்ணில்
உன் எண்ணங்களை வகைப்படுத்தி
நீ அனுப்பிய குறும்செய்திகள்
நினைவிருக்கிறதா....

* குட்டி போட்ட பூனை போல
என்னை சுற்றி சுற்றி
வந்து நீ ஆர்ப்பரித்த அந்த ஆனந்த
தருணங்கள் நினைவிருக்கா?

* உன் காதலை வழிமொழிந்து
என் காதலை நானும் சொல்ல
வானுக்கும் பூமிக்கும் நீ குதிக்க, 
நீ செய்த  சேஷ்டையை  வேடிக்கை பார்த்த
அந்த பஸ் நிறுத்த போலீஸ்
அதிகாரி உன்னை கண்டித்தது
நினைவிருக்கா?

* உதடு கடித்து சிரிக்கும், உன் சிரிப்பு 
அழகு என்ற உரைத்தபோது,
இரட்டைபொருள்தரும் ஒற்றை கவிதை
சொல்லி சிரித்தாயே... அந்த
இதம் தரும் நாட்கள் நினைவிருக்கிறதா???

* என் முதல் ஊதியத்தைஆர்வமாய் உன்னிடம் கொடுக்க....
காலரை தூக்கி விட்டு... அன்பு ஆணாதிக்கம்
புரிந்த அந்த அந்திநேரம் நினைவிருக்கா?

* கோபத்தில் நான் பொறிந்து
தள்ள, அமைதியாய் கேட்டுவிட்டு,
பின் என் அமைதிகுலைத்து
நீ பேசாமல் என்னை தவிக்க விட்ட
நாட்கள் நினைவிருக்கா????


* நான்  அனுப்பிய குறுச்செய்தியை
இன்றும் அழிக்காமல்...
என் சுவாசம் இது
என்று  காத்து என் காது கடித்த
காலம் நினைவிருக்கா?

* நம் காதலை நம் பெற்றோர்
அறிய, உன் வாழ்கை நான் என்று
அவர்கள் முன் என் கைப்பற்றி
நடந்தது  நினைவிருக்கா?

* ஊரார் முன்னிலையில்
என்  கரம் நீ  பற்றிய அந்த
இதம் தரும் இனிய நாட்கள் நினைவிருக்கா??

காதலே!!!
இந்த காதலில்,
எங்கே பரவசப்பட்டோம்,
எங்கே பயணித்தோம்  என்று
தெரியாமல் வெகு தூரம் சென்று விட்டோம்...
இந்த இனிய நாட்கள் நயமாய் நகர்ந்தாலும்....

இன்று!!!!நீ என்னை
பார்ப்பதும் அறிதாகி...
உன்கை பற்றி உலவுதலும் அறிதாகி...
உரையாடலும் குருஞ்ச்செய்தியாய் சுருங்கிப்போக..
பொருள் தேடி வாழ்வின் உயர்வு தேடி  நீ
பறந்து கொண்டே இருக்கிறாய்  ..
இன்பச்சுமைதாங்கும், சுமைதாங்கியாய்
நீ சுழன்று கொண்டே இருக்கிறாய்..

ஆனாலும் என் காதல் கணவனே!!!!
சொல்லிவை,
உன் செல்லத் தோழியிடம்,
என்னை விட அதிகநேரம்
அவளிடம் தான் இதழ் பொருத்தி
உறவாடுகிறாயாம்..
என்னை பார்த்து ஏளனமாய்
கணிசிமிட்டி என் காது கடிக்கிறாள்
 உன் கைபேசி...

என்னை விட உன் அன்பு தோழன்தான்
உன்னை அதிகம் சுமக்கிரானாம்
உன் CT100  என்னை ஏளனமாய் பார்க்கிறது...

என்னை உன் இதயத்தில் வைத்ததை விட
உன் கண்களை இணையத்தில் தான் அதிக நேரம்
வைக்கிறயாம்... உன் கையோடு இருக்கும்
உன் லேப்டாப் சொல்கிறது...

உயிரற்ற பொருளோடு
உறவாடும் என் உயிரானவனே!!!!
உன் உறவான என்னோடு
உறவடாது எனை ஏங்கவைத்தல்
நியாயமா என் காதலே!!!!

என் காதலே!!!!இந்த காதலில்,
இன்று!!!!
பார்ப்பதும் அறிதாகி...
உன்கை பற்றி உலவுதலும் அறிதாகி...
உரையாடலும் குருஞ்ச்செய்தியாய் சுருங்கிப்போக..
பொருள் தேடி வாழ்வின் உயர்வு தேடி  நீ
பறந்து கொண்டே இருக்கிறாய்  ..
இன்பச்சுமைதாங்கும், சுமைதாங்கியாய்
நீ சுழன்று கொண்டே இருக்கிறாய்..
இதில் என்னை நினைவிருக்கா????

Vivekanandhar Ponmozikal

விவேகானந்தரின் பொன்மொழிகள்..

*கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

*உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

*செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

*வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

*இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

*பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

*இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.

*அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும்.
நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.

*பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

*உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

*வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

*இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

*வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்!
தளைகளிலிருந்து விடுபடுங்கள்!

*இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.
சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!

*உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

*நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

*எவனுடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்; மற்றவர்கள் துராத்மாக்களே.

*எப்போதும் பொறாமையை விலக்குங்கள்.
இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.
இது என் உறுதியான நம்பிக்கை.

*சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும்.
சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

*நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது.
வீரர்களாகத் திகழுங்கள்!
தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும்.

*அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன்.

*இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
ஓ சிங்கங்களே! நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.
சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்..

*உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

*என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

*தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

*பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.

*சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் ஆன்மிக உணர்வை பெற முடியாது. அன்பின் மூலமாகத் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும். ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று சுயபலத்தில் நிற்க வேண்டும். ஆன்ம ஞானம் கிட்டிய பின் பிற உதவிகள் தேவையில்லை.

*கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

*எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் தூய்மையையும் ஆன்மா தூண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை.

*ஆன்மிக உணர்வை பெறாதவரை நமது நாடு மறுமலர்ச்சி அடையாது. ஆன்மிக வாழ்க்கையில் பேரின்பம் பெறாமல் போனால், புலனின்ப வாழ்க்கையில் திருப்தியடைய முடியாது. அமுதம் கிடைக்காமல் போனால் அதற்க்காகக் சாக்கடை நீரை நாடிச் செல்லமுடியாது.

*ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.

* ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி, அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும்.எங்கு பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ,அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.எங்கே அவர்கள் மதிக்கப் படவில்லையோ,அங்கே எல்லா காரியங்களும் முயற்சிகளும் நாசமடைகின்றன.எந்த நாட்டில்,எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை!


*தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

*எல்லாவற்றிலும் பரம் பொருளைப் பார்ப்பதுதான் மனிதனின் லட்சியமாகும். எல்லாவற்றிலும் பார்க்க முடியாவிட்டாலும் நாம் நேசிக்கும் ஒரு பொருளிலாவது பார்க்க வேண்டும். பிறகு இன்னொன்றில் பார்க்க வேண்டும். இப்படியே இந்தக் கருத்தை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*எல்லாவற்றையும் கடவுளாகப் பார்ப்பதற்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமயத்தில் நிச்சயம் அந்த லட்சியத்தை அடைந்துவிடுவோம்.

*தீமையை எதிர்க்காதீர்கள், அகிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று ஆச்சாரியார்கள் உப தேசித்து இருக்கிறார்கள். இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து தூள் தூளாகி விடும்.


*அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் நம் வாழ்க்கையையும் பறித்துக் கொண்டு தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள். இது நமக்குத் தெரியும். இத்தகைய அகிம்சை சமுதாயத்தில் ஒரேயொரு நாள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும்.

*ஆனாலும் தீமையை எதிர்க்காதீர்கள். என்ற உபதேசத்தின் உண்மையை உள்ளுணர்வின் மூலமாக நம் இதய ஆழங்களில் உணரவே செய்கிறோம். இது மிக உயர்ந்த லட்சியமாக நமக்குத் தோன்றுகிறது. என் றாலும் இந்தக் கோட்பாட்டை உபதேசிப்பது என்பது மனித குலத்தின் பெரும் பகுதியை நிந்திப்பதற்கே சமமாகும்.

*அதுமட்டுமல்ல,தாங்கள் எப்போதும் தவறையே செய்கிறோம் என்ற எண்ணத்தை அது மனிதர்களிடம் உண்டாக்கிவிடும். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களின் மனசாட்சியில் சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருக்கும். இது அவர்களை பலவீனப்படுத்துகிறது.

*இவ்வாறு தொடர்ந்து தங்களை மறுப்பது, மற்ற பலவீனங்கள் உண்டாக்கும் தீமையை விட அதிக தீமையைத் தரும். எந்த மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்கிவிட்டானோ, அவனுக்கு அழிவின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதல் கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான். ஏனென்றால் நாம் முன்னேற வேண்டுமென்றால் முதலில் நமக்கு நம்மிடம் நம்பிக்கை வேண்டும். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும்.

*தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒரு போதும் நம்பிக்கை வைக்க முடியாது.

*நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் (அதற்காக சிங்கமாக ஆகவேண்டும் என் நினைத்தால் அது முடியாது). உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).


*"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" "'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

*பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

*கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

*உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

*மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.

*சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

*நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.

*அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

*உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.

*உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

*எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ் அந்த நாடும் பாழ்.

*நமக்குப் பல அனுபவங்களை பெற்றுத்தர இந்த உலகம் படைக்கப்பட்டது. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் நம்மால் அனுபவிக்கப் பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக அது வேண்டும், இது வேண்டும் என யாரிடமும் கேட்காதே. வேண்டுதல் ஒரு பலவீனமாகும். இந்த வேண்டுதல்தான் நம்மை பிச்சைக்காரர்களாக்குகிறது. நாம் அனைவரும் ராஜகுமாரர்கள். பிச்சைக்காரர்கள் அல்ல.


*இயற்கை என்றும், விதி என்றும் எதுவும் கிடையாது.கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுவே நடக்கும்.

* கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.

* ஏதாவது தவறு செய்துவிட்டால், ""ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே!'' என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன்தான். ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.

* உலக மக்கள் இன்று கடவுளை கைகழுவி வருகிறார்கள். காரணம் கேட்டால், "கடவுள் எங்களுக்கு என்ன செய்தார்? அவரால் எங்களுக்கு என்ன பயன்?' என்று கேட்கிறார்கள். நீங்கள் கேட்பதை எல்லாம் செய்வதற்கு கடவுள் ஒன்றும்நகரசபை அதிகாரி அல்ல.
*மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.

* உலக இன்பம் மனிதவாழ்வின் லட்சியமாக இருக்கக்கூடாது. ஞான இன்பம் அடைவதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். ஞானம் என்பது ஆண்டவனை உணர்வதும், சக மனிதர்களை ஆண்டவனாய் காண்பதுமாகும்.

* உதவி செய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமாய் இரு, சாந்தம் கொள், வேறுபாடு காட்டாதே.

* உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள். தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்த தகுதியானவன்.

* பலவீனமாக இருக்கிறோமோ என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.

* சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே. மற்றவை யாவும் மரணத்துடன் முடிந்துவிடும்.

*தியானம்
எல்லாவற்றையும் தவிர்க்கும் சக்தியைக் கொடுப்பதுதான் தியானம். “பார் அங்கே..அதோ ஒரு அழகான பொருள்” என இயற்கை கூறுகிறது. “கண்களே பார்க்காதீர்கள்!” என்று நான் கண்களுக்கு உத்தரவிடுகிறேன். கண்கள் பார்ப்பதில்லை. “இதோ நல்ல நறுமணம், இதை முகர்ந்து பார்” என இயற்கை கூறுகிறது. “அதை முகராதே!” என நான் என் மூக்கிற்கு உத்தரவிடுகிறேன். மூக்கு அதை முகர்வதில்லை. இயற்கை ஒரு கொடிய காரியம் செய்கிறது. என் குழந்தைகளில் ஒன்றைக் கொல்கிறது. “இப்போது என்ன செய்வாய்? மடையா உட்கார்ந்து அழு. துக்கத்தின் ஆழத்திற்குப்போ!” என்று இயற்கை சொல்கிறது. ஆனால் நான் சொல்கிறேன், “நான் போக வேண்டிய அவசியம் இல்லை!” என்று குதித்து எழுந்து சுதந்திரமாக இருக்கவேண்டும். இதைப் பயிற்சி செய்து பாருங்கள். ஒரு நொடையில் தியானத்தில் இந்த இயற்கையை நீங்கள் மாற்ற முடியும். இந்த சக்தி உங்களுக்குக் கிடைத்தால் அதுவே பரலோகமாகாதா? சுதந்திரமாகாதா? தியானத்தின் சக்தி அதுதான்!

*ஞானதீபம்

ஓ மனிதா! இதை நம்பு. உள்ளத்தில் இதை ஊன்றச் செய். மாண்டவர் மீள்வதில்லை. கழிந்த இரவு வருவதில்லை. வீழ்ந்த அலை எழுவதில்லை. ஒரு முறை பெற்ற உடலை மீண்டும் மனிதன் பெறுவதில்லை. எனவே, ஓ மனிதா இறந்துபோன பழங்கதையை வணங்காதே! வா இங்கு வாழும் நிகழ்காலத்தை வனங்கு. சென்றதை நினைத்து புலம்பாதே. இன்று உள்ளதைக் கண்டு அதில் பங்கு கொள். அழிந்துபோன கரடு முரடான பாதையில் சென்று உனது சக்தியை வீணாக்காதே. உன்னருகே உள்ள புதிய செப்பனிடப்பட்ட நன்கு வகுக்கப்பட்ட ராஜபாதையில் செல். வா! உன்னை அழைக்கிறோம். அன்புள்ளவன் இதை அறிந்து கொள்வான்!

*மனதை அடக்கு

எல்லா பேய்களும் நம்முடைய மனத்திலேதான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கி இருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும். மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்கவேண்டும் என்பது மட்டும் நமக்கு தெரிந்து இருந்தால் உலகம் தனது ரகசியங்களை வெளியிடத் தயாராக இருக்கிறது. அத்தகைய வலிமையும் தாக்கும் வேகமும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. மனதை ஒருமுகப் படுத்துபவனுக்கே இந்த வலிமை கிட்டும். மனித உள்ளத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.

Ayakalaikal 64

ஆயகலைகள் அறுபத்து நான்கு ..

இன்று விஞ்ஞானம் எத்தனையோ புதிய புதிய விஷயங்களை தந்து கொண்டிருக்கிறது. அத்தனையும் ஆச்சரியப்படுத்தும் விஷயங்களாக இருக்கின்றன.
ஆனால் அந்தக் காலத்தில் ஆயகலைகள் அறுபத்து நான்கும் தெரிந்திருந்தால் அத்தனையும் அறிந்த அறிவாளி என்று அர்த்தம் என்று இந்து மத புராணங்கள் சொல்கின்றன.
அந்த ஆயகலைகள் அறுபத்து நான்கு எது என்று உங்களுக்குத் தெரியுமா?
1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாஸ்திரம்
8. ஜோதிடம்
9. தர்ம சாஸ்திரம்
10. யோக சாஸ்திரம்
11. மந்திர சாஸ்திரம்
12. சகுன சாஸ்திரம்
13. சிற்ப சாஸ்திரம்
14. வைத்திய சாஸ்திரம்
15. உருவ சாஸ்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுர பாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரும்மம்
23. வீணை
24. வேணு (புல்லாங்குழல்)
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம்
27. அத்திரப் பரிட்சை
28. கனகப் பரிட்சை (பொன் மாற்று பார்த்தல்)
29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம்)
30. கஜப் பரிட்சை (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை
33. பூமிப் பரிட்சை
34. சங்கிராம விலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகருடனம்
37. உச்சாடனம்
38. வித்து வேடனம் (ஏவல்)
39. மதன சாஸ்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. இரசவாதம்
43. காந்தருவ வாதம் (சங்கீத வித்தை)
44. பைபீலவாதம் (மிருக பாஷை)
45. கவுத்துவ வாதம்
46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்)
47. காருடம்
48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது நாட்டியம் பழகுவித்தல்)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது)
53. அதிரிசியம்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம்
59. திட்டி ஸ்தம்பம்
60. வாக்கு ஸ்தம்பம்
61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம்
63. கட்கத்தம்பம்
64. அவத்தைப் பிரயோகம்
-நன்றி: ஆன்மீகம்-Geetham.net

Kadhali

நெஞ்சவர்ணக்கிளி…

உன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும்
வெகு தூரமாயிற்றே
தினமும் இரவில் தனியாக
என் கனவில் வர
உனக்குப் பயமாக இல்லையா?
நேற்று
எனக்கு உறக்கம் வந்த பிறகுதான்
உன் கனவு வந்தது
இன்று
உன் கணவு வந்த பிறகுதான்
எனக்கு உறக்கம் வந்தது!
உன் கனவில் நான் இருக்கும் போது
என் அறைக் கதவை
யாராவது தட்டினால்
நம்மைப் பாராட்டி
காதல் கைதட்டுவதாகவே
நினைத்துக்கொள்கிறேன்!
மனைவியாக நீ
என்னருகில்
உன் கனவுகளைக் காணும்
நாளுக்காகக் காத்திருக்கிறது
என் உறக்கம்!
இந்தக் கனவுகள் எல்லாம்
சொல்வது ஒன்றே ஒன்றுதான்…
உறக்கத்திலும் நான் உன்னைக்
காதலிக்கிறேன்!
** நன்றி..தபூ சங்கர் ,விகடன்..

Solar panels

HOW IT WORKS: The key breakthrough is the miniaturized concentrator solar cell, which uses a lens with concentric grooves to focus collected light. Even though it is only the size of a postage stamp -- compared to the usual solar collector area that spans 4 x 4 feet -- the cell is much more efficient in collecting and reusing solar energy. The lens focuses incoming sunlight onto the solar cell. Microchannels at the base of the module transfer energy in the form of heat and light to wires contained inside. Each vertical stack of lenses rolls and tilts like a track blind, keeping the surface of the lenses faced to incoming sunlight as the sun changes position in the sky throughout the day. Incorporating these new cells into arrays could make solar energy an option that is competitive with other energy sources, reducing our dependency on fossil fuels.

ABOUT SOLAR CELLS: The solar cells on calculators and satellites are photovoltaic cells or modules: groups of cells electrically connected and packaged together. Photovoltaics convert sunlight directly into electricity. Photovoltaic cells are made of semiconductor materials like silicon. When light strikes the cell, a certain portion of the light is absorbed by the semiconductor material. The energy of the absorbed light knocks electrons in the semiconductor material loose, allowing them to flow freely. Photovoltaic cells also all have one or more electric fields that act to force the freed electrons to flow in a certain direction. This flow of electrons is a current. By placing metal contacts on the top and bottom of the photovoltaic cell, the current can be drawn off to be used. For example, the current can power a calculator. However, conventional photovoltaic panels made from silicon to provide electricity are expensive, and thus not cost-competitive with electricity from the power grid.

Asia economy 2010

GDP Growth Projection On Asian Economies
Country Name

2007 2008
Japan
2.3
1.9
Hong Kong SAR
5.5
5.0
Korea
4.4
4.4
Singapore
5.5
5.7
China
10.0
9.5
India
8.4
7.8
Indonesia
6.0
6.3
Malaysia
5.5
5.8
Philippines
5.8
5.8
Thailand
4.5
4.8
Vietnam
8.0
7.8

Indian economy 2010

Economic Prospects for 2010

The global economy seems to be recovering after the recent economic shock. The Indian economy, however, was hit in the latter part of the global recession and the real economic growth witnessed a sharp fall, followed by lower exports, lower capital outflow and corporate restructuring. It is expected that the global economies will continue to sustain in the short-term, as the effect of stimulus programs is yet to bear fruit and tax cuts are working their way through the system in 2010. Due to the strong position of liquidity in the market, large corporations now have access to capital in the corporate credit markets.

India’s Economic Outlook Projection








2007
2008
2009
2010






GDP Growth

9.40%
7.30%
5.40%
7.20%
CPI

6.40%
9.30%
5.50%
4.90%

Sankam spinning Mills discussion

What’s the trend in polyester prices?
Polyester prices have risen by around 25% in the last 12 months. In viscose, prices have increased by around 30% in the past one year. However, we have been able to raise yarn prices by 30-35%. Overall, we have been able to improve our realisations as pricing power has come back.


Has interest cost increased substantially?
In 2007, our interest cost was Rs150mn. This has gone up to Rs500mn now due to a change in interest rate scenario. But, we get interest subsidy under TUFs. So, our total cost of long-term fund was close to 1% prior to the global financial crisis. This has now gone up to 3.5%. Since our performance this year has improved, we can start fighting with the bankers to reduce the rates. 

Polyester market increase due to Cotton price increase

Mumbai, Dec. 25
With the sharp rise in cotton prices, textile manufacturers have shifted their focus to ramping up polyester yarn production capacity.
Alok Industries, a leading integrated textile company, plans to double its polyester yarn capacity to 1,200 tonnes a day by March at an investment of Rs 800 crore.
Mr Sunil O. Khandelwal, Chief Financial Officer, said the company had foreseen the shortage of natural fibre cotton and would begin increasing polyester yarn production from next month.
Similarly, Ganesh Polytex, which produces polyester staple fibre by recycling plastic pet bottles, plans to increase its processing capacity by 15,000 tonnes to 72,000 tpa. As part of its forward integration plans, the company is also putting up 25,000 spindles to produce polyester yarn at its existing Bilaspur plant in Chhattisgarh. This will involve an investment of Rs 125 crore.
Mr Gopal Agarwal, Chief Financial Officer, said Ganesh Polytex would tap the Centre-sponsored Technology Upgradation Fund (TUF) scheme for the spindles.
The price gap between cotton and polyester yarn has widened in the last few months with demand for the former increasing substantially on the back of a lower-than-expected crop this season, said Mr Khandelwal. Cotton yarn of 40s counts currently trades at Rs 260 a kg while polyester yarn of 80-denier is priced at Rs 110-115 a kg. Cotton prices are expected to stabilise by mid-January with arrivals improving. The most popular variety, Shankar-6, may fall from Rs 41,000 to Rs 37,000-38,000 a candy as supply improves.

More than the fall in production, the uncertain Government policy on cotton has made it difficult for companies to plan their future, said an analyst. The textile industry's shift to polyester has pushed up the prices of the key raw material, PTMEG (poly tetra methylene ether glycol), but this has been moderate compared to cotton, he said.
The fall in cotton production over the years has pushed up use of polyester by the textile sector. In the last decade, this has nearly doubled from 30 per cent to 55 per cent and expected to further increase to 70 per cent in the next five years, said Mr Khandelwal.
On the quality issue, he added, a fabric with 75 per cent polyester and 25 per cent cotton is considered a good blend given the price advantage. A shirt made of 100 per cent cotton would cost about Rs 600 while that in polyester Rs 350-400.

Cotton price in 2011

Cotton stable on lower offtake by exporters

Our Correspondent
Rajkot, Jan. 3
Cotton prices remain unchanged on the first day of the week as demand from export side is still below expectations. At present, south Indian mills are buying according to their requirement.
On Monday, Gujarat Sankar-6 variety cotton was traded on Rs 42,700-43,000 a candy of 356 kg, while raw cotton price was quoted Rs 900-940 for a maund of 20 kg. In Rajkot Agricultural Produce Marketing Committee (APMC) yard, 25,000-30,000 maund raw cotton arrived and price was Rs 885-930, Jasdan arrival was 10,000-15,000 maunds and price Rs 850-935, at Botad 35,000 maunds arrived and price Rs 895-951.
According to market sources,exporters have 15 lakh bales stock on hands. A Rajkot-based broker, Mr Avadhesbhai Sejpal, said: “For some time, cotton price will remain stable as demand and supply is equal. Cotton may increase after a month or if government will allow more export.”
Arrivals are lower as the gap between second and third flowering of cotton crop is short. But it will be normal within a short period, said traders.
In Andhra Pradesh, cotton prices ruled steady with arrivals being lower than Saturday.
In Adilabad, prices ruled above Rs 4,200 a quintal, while they were a tad lower in Guntur.
In Khamman, too, prices were firm, while rates were above Rs 4,500 in Khamman district.

2010 textile initiatives for weavers

• National Textile Corporation:

Out of 24 mills identified for revival, NTC has already completed modernisation of 18 mills. These mills are now making cash profit and working towards operational profits. The Company has generated Rs 5178.92 crore by sale of surplus land/assets as on 1.11.2010. Net worth of the company has become positive. The Company is now looking forward to explore new areas such as technical textiles for which requisite approval is required. For the first time in the history of NTC, online e-auction of sale of surplus land of two mills in Mumbai was conducted recently and has fetched Rs 1,979 crore against reserved price of Rs 1,000 crore .

Revival of National Jute Manufacturers Corporation (NJMC):
The Government has approved a revival package of Rs 1562.98 crore and waiver of Rs 6815 Crore of outstanding loans & interest to NJMC to enable the revival of the company.

Technology Up gradation Fund Scheme (TUFS) :
During the last two years Rs 3,458 crore ( Rs 2,546cr in 2009 and Rs 912 cr in 2010) has been disbursed to beneficiaries directly. The Ministry is examining the possibilities of revising the Scheme and would approach the Cabinet for its approval.

Two Maga Handloom Clusters at Murshidabad in West Bengal and Viruddhanagar in Tamil Nadu has been sanctioned during 2010-11. During the current year , it is proposed to conduct more than 650 events , generating more than Rs 400 crore . So far , more than 225 events have been organised.

Draft Fibre Policy has been prepared after consultation with all stakeholders and the Ministry would be seeking Cabinet approval in the coming months.

Knitwear Technology Mission at a cost of Rs 5 Crore has been established at Tirupur for enhancing capacities and expertise in the knitwear sector.

A Mega Cluster for Powerloom in Bhilwara in Rajasthan and a Carpet Cluster at Srinagar sanctioned during 2010-11.

Rs 200 crore as one time grant given for Zero Liquid Discharge Effluent Treatment Plant established by Tirupur Knitwear Industry.
 
Press Information Bureau

2010 Textile initiative for weavers I

Major initiatives of Ministry of Textiles during 2010
January 04, 2011 (India)

The Ministry of Textiles took several new initiatives during 2010 to achieve faster and inclusive growth and participatory development. Major policy initiatives taken by the Ministry are as under:

Scheme for Integrated Textile Parks:

40 Parks have been sanctioned till date in nine states, with total project cost of about Rs 4141 crore with Government contribution of Rs 1425 crore. When fully functional the Parks would have an investment of Rs 19,500 crore and provide employment to more than 8 lakh persons. Taking into account the success of the Scheme, the Government has approved sanction of new Parks during the 11th Plan with a financial liability of Rs 200 crore and given permission to carry forward liability of these new Parks into the 12th Plan up to Rs 200 crore. With a view to refreshing investor memory about the contours of the Scheme and inviting investment, a series of “Road Shows” were organised at Chennai, Bengaluru, Hyderabad, Ahmedabad and Mumbai. During these shows several Expression of Interest were received. A few Parks are likely to be sanctioned by March 2011.

Integrated Skill Development Scheme:

In the line with the Policy Announcement of the Government, in the Current Five Year Plan, the Government has launched the Integrated Skill Development Scheme for the Textiles & Apparel Sector, including Jute & Handicrafts., with an objective of capacity building of Institutions providing skill development & training in Textiles Sector. Under this Scheme, the Government has envisaged skill development of 27 lakh persons with overall costs of Rs 2360 crore over the next five years. Under the Scheme, the first project of Ministry the Apparel Training Development Centre has been launched for manufacturing of Apparel through Research & Training workforce Training Programme in Tamil Nadu in October this year. The total cost of the project is Rs 29.59 crore of which Government of India would be funding Rs 20.40 crore.

Cotton –Policy interventions in Cotton season 2010-11:

• Registration of cotton export contracts would commence from October 1, 2010
• Actual exports would commence from November 1, 2010.
• The exportable surplus is identified as 55 lakh bales.
• There would be no registration after the exportable surplus is registered.

Cotton Yarn- Policy interventions:

• Hank Yarn obligation expanded from 40s count to 80s counts w e f 31.3.2010.
• The 7.67 percent DEPB incentive on cotton Yarn exports was withdrawn w e f April 21, 2010.
• Duty Drawback on cotton yarn was withdrawn w e f 29.4.2010.
• Strict monitoring of hank yarn obligation started from 1.4.2010.
• Registration of cotton yarn export with office of the Textiles Commissioner was made mandatory w e f 9.4.2010.
• Cotton Yarn Advisory Board has been constituted to monitor the domestic and international prices of cotton yarn.
• There will be no registration of cotton yarn exports beyond 720 million kgs.
   

Tamilnadu Election 2011 date Announcement

Tamilnadu Secretariat
டெல்லி: தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.

தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் மே 16ம் தேதி முடிவடைகிறது. அடுத்த சில நாட்களில் புதுச்சேரி, கேரளா மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் முடிவடைகிறது. ஜூன் மாதத்தி்ல மேற்கு வங்க சட்டசபை காலம் முடிவடைகிறது.

இதையடுத்து இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

தற்போது தேர்தல் தேதியை இறுதி செய்வதற்கான கட்டத்திற்கு தேர்தல் ஆணையம் வந்து விட்டது. இதுதொடர்பாக தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஆலோசனைகளை நடத்தி முடித்து விட்டது. அடுத்து அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் ஆலோசனைகள் நடைபெறவுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே நாளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் மாநிலங்களில் மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும், ஜூன் மாதத்தில் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.